என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள்
Byமாலை மலர்4 July 2021 12:35 PM GMT (Updated: 4 July 2021 12:35 PM GMT)
ஹோண்டா நிறுவனத்தின் பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் விற்றுத்தீர்ந்தன.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 கோல்டு விங் டூர் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியா கொண்டுவரப்பட்ட முதற்கட்ட யூனிட்கள் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது. ஹோண்டாவின் பிளாக்ஷிப் கோல்டு விங் டூர் மாடல் ஜப்பானில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் கோல்டு விங் டூர் மாடல் துவக்க விலை ரூ. 37.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஹோண்டா கோல்டு விங் டூர் மாடலில் 1833சிசி லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், 24 வால்வ் SOHC பிளாட்-6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
"நாங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலெரியா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X