search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வாகனங்கள்
    X
    வாகனங்கள்

    வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களுக்கான கால அவகாசத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.

     வாகனங்கள்

    கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் நிறைவடைவய இருந்தது.

    தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் இந்த கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×