என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
நவராத்திரி காலக்கட்டத்தில் 550 கார்களை விநியோகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்
Byமாலை மலர்27 Oct 2020 11:02 AM GMT (Updated: 27 Oct 2020 11:02 AM GMT)
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நவராத்திரி காலக்கட்டத்தில் மட்டும் 550 கார்களை விநியோகம் செய்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நவராத்திரி காலக்கட்டத்தில் மட்டும் 550 கார்களை விநியோகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்திலும் மெர்சிடிஸ் பென்ஸ் இத்தனை யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, மும்பை மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் இந்த நிறுவனம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 175 புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்கள் இந்த நகரங்களில் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.
விற்பனை விவரங்களை பொருத்தவரை சி கிளாஸ், இ கிளாஸ் செடான், ஜிஎல்சி, ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் எஸ்யுவிக்கள் அதிகளவு வரவேற்பை பெற்று இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில், மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனையை சமன் செய்து இருக்கிறது.
நவராத்திரியில் இத்தனை வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, இதேபோன்ற விற்பனை தீபாவளி காலக்கட்டத்திலும் நடைபெறும் என மெர்சிடிஸ் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X