என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பாதுகாப்பிற்கு இந்த அம்சம் பெறும் உலகின் முதல் கார் இது தான்
Byமாலை மலர்27 July 2020 11:58 AM GMT (Updated: 27 July 2020 11:58 AM GMT)
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடல் பாதுகாப்பிற்கு இந்த அம்சம் பெறும் உலகின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர வாகன தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் 2021 எஸ் கிளாஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பின்புற இருக்கைகளுக்கு ஏர் பேக் வழங்கப்பட இருக்கும் உலகின் முதல் மாடல் என கூறப்படுகிறது.
செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ் கிளாஸ் மாடல் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பின்புற இருக்கைகளுக்கு ஏர்பேக் வழங்கப்படுவது சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த மாடலில் சைல்டு சீட்கள், ஆப்ஷனல் பெல்ட் பேக் மற்றும் உள்புறம் காற்றடைக்கப்பட்ட சீட் பெல்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்புற இருக்கைகான ஏர்பேக் முன்புற இருக்கையின் பின்புறத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.
புதிய மாடலில் வழங்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் ஒவ்வொன்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வரும் விபத்து சார்ந்த ஆய்வுக்கு பின் உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X