என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இப்படி வாகனம் ஓட்டுவோர் அதிக கவனமாக செயல்படுகின்றனர் - ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்
Byமாலை மலர்11 May 2020 8:25 AM GMT (Updated: 11 May 2020 8:25 AM GMT)
சாலையில் வாகனம் ஓட்டுவோர் இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் போது அதிக கவனமாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களின் செல்லப்பிராணிகளில் நாய் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. தற்சமயம் நாய்களை வாகனத்தில் ஏற்றி பயணம் செய்வோர் சாலையில் அதிக கவனமாக செயல்படுகின்றனர் என சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
சியாட் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாய்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்ட பின் வாகன உரிமையாளர்கள் அதிக கவனமாக செயல்பட வேண்டும் என தீர்மானிப்பதாக தெரிவிதுள்ளனர்.
வாகனங்களில் நாய்களை ஏற்றி பயணிப்போரிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் கலந்து கொண்டு பதில் அளித்தவர்களில் 54 சதவீதம் பேர் தங்களது செல்லப்பிராணிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டும் போது அதிக கவனமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நாய்களை வாகனத்தில் ஏற்றியதும், வாகனத்தை ஓட்டும் போது அவர்களின் மனநிலை வழக்கத்தை விட அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக 18 முதல் 24 வயதுடைய மோட்டாரிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 69 சதவீதம் பேர் செல்லப்பிராணிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மிகவும் பாதுகாப்பாக பயணம் செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.
ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்தவர்களில் 55 வயதுக்கும் மேற்பட்டோரில் 42 சதவீதம் பேர், தங்களது செல்லப்பிராணி வாகனத்தில் இருந்தால் அதிக கவனத்துடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதனை லண்டன் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வாகனம் ஓட்டுவோரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நாய் வாகனத்தில் இருக்கும் போது மன அழுத்தம் குறைவதாக 35 சதவீத ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓட்டுனர்களில் பலர் நாய்களை ஏற்றிக் கொண்டு வாகனத்தில் பயணம் செய்வது தொடர்பான சட்ட விவரங்கள் தங்களுக்கு தெரியாது என பதில் அளித்திருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X