என் மலர்
ஆட்டோமொபைல்

வாகனங்கள்
ஊரடங்கு காரணமாக ரூ. 6400 கோடி மதிப்பிலான பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனையாகவில்லை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரூ. 6400 கோடி மதிப்பிலான பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து வருகின்றன.
மாருதி சுசுகி, மஹந்திரா, டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்டவை தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன.
எனினும், பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்களின் பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனையாகாமல் உள்ளது. முந்தைய அரசு அறிவிப்பின் படி ஏப்ரல் 1, 2020 முதல் நாட்டில் பி.எஸ்.6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

தற்சமயம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் அனைத்து விற்பனையகங்களும் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் நாட்டில் ரூ. 6400 கோடி மதிப்பிலான பி.எஸ்.4 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக வெளியான தகவல்களில் ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பி.எஸ். 4 வாகனங்களை விற்பனை செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த காலக்கெடுவை மாற்றியமைத்து மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இருந்ததாக கூறப்பட்டு இருக்கிறது.
Next Story






