என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-10.08.25
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முன்வருவர்.
ரிஷபம்
புகழ் மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.
கடகம்
கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.
சிம்மம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம்.
கன்னி
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். விரயமுண்டு. திடீர் இடமாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.
துலாம்
மனக்குழப்பம் அகலும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழிலில் மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றை கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
தனுசு
யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொலைபேசி மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும். வருமானப் பற்றாக்குறை அகலும்.
மகரம்
வரவு திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
மனக்கலக்கம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
மீனம்
புகழ் கூடும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.






