என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் 30.1.2026: இந்த ராசிக்காரர்களுக்கு திறமைகள் பளிச்சிடும்
    X

    இன்றைய ராசிபலன் 30.1.2026: இந்த ராசிக்காரர்களுக்கு திறமைகள் பளிச்சிடும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    ரிஷபம்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள்.

    மிதுனம்

    பிரச்சனைகள் தீரும் நாள். பிரபலஸ்தர்களின் ஆதரவு உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    கடகம்

    நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    சிம்மம்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கோபத்தின் காரணமாக ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கன்னி

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உறவினர்களில் ஒரு சிலர் உதவி கேட்டு வருவர். வரவு திருப்தி தரும்.

    விருச்சிகம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.

    தனுசு

    ஆதாயம் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகன பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள்.

    மகரம்

    பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீகச் சொத்து பிரச்சனைகள் அகலும். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கும்பம்

    திறமைகள் பளிச்சிடும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

    மீனம்

    பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    Next Story
    ×