என் மலர்
ராசிபலன்

Today Rasipalan- இன்றைய ராசிபலன் 29.09.25: இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்குமாம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வ தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோக மாற்றம் உண்டு.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
நட்பால் நலம் கிடைக்கும் நாள். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
கன்னி
லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடலாம். தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வை முன்னிட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
விருச்சிகம்
முயற்சிகளில் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.
தனுசு
பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களைச் செய்ய முடியாமல் போகலாம்.
மகரம்
தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும்.
கும்பம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். கல்யாண முயற்சி கைகூடும்.
மீனம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.






