என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் 16.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்
    X

    இன்றைய ராசிபலன் 16.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    தன வரவு திருப்தி தரும் நாள். தடைகள் விலகும். தனித்து இயங்க முடிவெடுப்பீர்கள். குடும்ப பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். விரயம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் எதையும் விவாதிக்க வேண்டாம்.

    கடகம்

    குடும்பச் சுமை கூடும் நாள். பிள்ளைகளின் படிப்பிற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.

    சிம்மம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார போட்டிகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

    கன்னி

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    துலாம்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    விருச்சிகம்

    நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    தனுசு

    வருமானம் திருப்தி தரும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். ஓரிரு நாட்களாக தாமதித்த பணிகள் இன்று நடைபெறும். ஆன்மிகப் பயணம் உண்டு.

    மகரம்

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். வருமானம் வந்தாலும் விரயங்கள் மேலாங்கும். தொழில் சீராக நடைபெறும். வி.ஐ.பி.க்கள் சந்திப்பு கிட்டும்.

    கும்பம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீண் விரயம் உண்டு. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    மீனம்

    உதாசீனப்படுத்தியவர்கள் ஓடிவந்து இணையும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பற்றாக்குறை அகலும். பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும்.

    Next Story
    ×