என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன்: 19.07.2025
    X

    இன்றைய ராசிபலன்: 19.07.2025

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

    ரிஷபம்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு இருமடங்காகும். இல்லத்தில் மனக்கசப்பு தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    மிதுனம்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் உண்டு.

    கடகம்

    கண்ணும் கருத்துமாகச் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    சிம்மம்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    கன்னி

    ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகனப் பழுது செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    துலாம்

    வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே திரும்பும் நாள். உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்ட முன்வருவர். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சிகம்

    தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    தனுசு

    கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லை உண்டு. பயணத்தை மாற்றியமைக்க நேரிடும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    மகரம்

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். விரயங்களை சுப விரயமாக்கிக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருந்து விலக நேரிடும்.

    மீனம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் அதிக சம்பளம் தருவதாக அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    Next Story
    ×