என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 17.07.2025
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
கடகம்
மகிழ்ச்சி கூடும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். சொத்து வாங்கும் சூழ்நிலைக்கு கேட்ட உதவி கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.
கன்னி
வீண் விவகாரங்கள் விலகும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். செய்தொழிலில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் கிடைக்கலாம்.
துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
விருச்சிகம்
யோகமான நாள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
மகரம்
விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
கும்பம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தடைகள் விலகும். தனவரவு உண்டு. தாழ்வு மனப்பாமையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.
மீனம்
காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பஞ்சாயத்துகள் சாதகமாகும். தொழில் மாற்ற சிந்தனை உருவாகும்.






