டென்னிஸ்

துபாய் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

Published On 2024-02-24 06:47 GMT   |   Update On 2024-02-24 06:47 GMT
  • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது.
  • நேற்று நடந்த போட்டியில் ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

துபாய்:

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

2-வது அரையிறுதியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அன்னா காலின்ஸ்கயா, ஜாஸ்மின் பவுலினியுடன் மோதுகிறார்.

Tags:    

Similar News