டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி,
குரோசியாவின் மேட் பவிக், எல் சால்வடாரின் மார்சிலோ அரிவலோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 3-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.