டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி

Published On 2024-01-24 09:06 GMT   |   Update On 2024-01-24 09:06 GMT
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
  • ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

மெல்போர்ன்:

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- அர்ஜெண்டினாவின் மால்டெனி, கோன்சலேஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News