தொழில்நுட்பம்
Mi பேண்ட் 3ஐ

சியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்

Published On 2019-12-14 04:34 GMT   |   Update On 2019-12-14 04:34 GMT
சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேண்ட் இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சியோமியின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் Mi பேண்ட் 3ஐ இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இதன் விற்பனை Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை சியோமி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Mi பேண்ட் 3ஐ மாடலில் டச் சென்சிட்டிவ் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Mi பேண்ட் 3ஐ மாடலின் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



சியோமி Mi பேண்ட் 3ஐ சிறப்பம்சங்கள்

- 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் தொடுதிரை டிஸ்ப்ளே
- நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும் வசதி
- உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
- 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டணட்
- 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- ப்ளூடூத் 4.2 எல்.இ.
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணையந்து இயங்கும்
- 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி
Tags:    

Similar News