தொழில்நுட்பம்

வியர்வை கொண்டு மன அழுத்தத்தை கண்டறியும் புதிய பட்டை கண்டுபிடிப்பு

Published On 2018-07-22 15:20 IST   |   Update On 2018-07-22 15:20:00 IST
மனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். #WearableTech



நம் உடலின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை நொடிகளில் கண்டறியும் வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தோளில் அணியக்கூடிய சிறிய பட்டை நம் தோலில் ஒட்டிக் கொண்டதும் வியர்வையை உறிந்து கொண்டு கார்டிசல் அதவாது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை (இயக்குநீர்) நொடிகளில் கண்டறிந்து விடும்.

நாள் முழுக்க உடலில் கார்டிசல் அளவு இயற்கையாகவே ஏறி, இறங்கும், அந்த வகையில் வழக்கமான காஜ் மனிதர்களின் உடல் சோர்வு மற்றும் மன சோர்வை கண்டறிந்து, அவர்களது அட்ரினல் சுரப்பி சீராக வேலை செய்கிறதா என மருத்துவர்கள் சோதனை செய்ய முடியும்.

தற்சமயம் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஆய்வகங்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளை தெரிந்து கொள்ள பலநாள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில் பயனர் தனது உடலின் வியர்வையில் பட்டையை வைத்து, இதனை சாதனத்துடன் இணைத்தால் சில நொடிகளில் கொண்டு சில நொடிகளில் மன அழுத்தம் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.



தற்சமயம் ப்ரோடோடைப் முறையில் சோதனை செய்யப்படும் இந்த வழிமுறை வெற்றிபெறும் பட்சத்தில் மன அழுத்த அளவு சீராக இல்லாத நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் செவ்வக வடிவம் கொண்ட நீட்டத்தக்க சென்சார் மற்றும் மெம்பிரேன் கார்டிசலுடன் இணைந்து கொள்ளும் வகையில் இந்த பட்டையை உருவாக்கியுள்ளனர். தோலில் ஒட்டிக் கொள்ளும் இந்த பட்டையில், வியர்வை படும் போது அதில் உள்ள ஓட்டை வழியே அனுமதிக்கிறது. இதன் வாட்டர்ப்ரூஃப் லேயர் பட்டையை பாழாகாமல் பார்த்துக் கொள்கிறது.

உடலில் உள்ள வியர்வை பட்டையில் உள்ள நீர்தேக்கம் போன்ற பகுதியில் சேமிக்கப்படும், இதன் மேல் கார்டிசலை உணரும் சவ்வு பொருத்தப்பட்டுள்ளது. #stress #WearableTech
Tags:    

Similar News