search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wearables"

    ஐ.டி.சி. வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையின் படி இந்தியாவின் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2018 இரண்டாவது காலாண்டில் இந்திய அணியக்கூடிய சாதனங்கள் சந்தை வளர்ச்சியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சந்தை முந்தைய வருடத்தை விட 66% மற்றும் 40% அதிகரித்துள்ளது.

    இதே அறிக்கையில் 2018 இரண்டாவது காலாண்டில் பத்து லட்சம் அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் மூன்று நிறுவனங்கள் தங்களது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

    ரிஸ்ட்பேன்ட்களை பொருத்த வரை இந்த காலாண்டில் 90% விற்பனையாகி இருக்கிறது. அணியக்கூடிய கம்ப்யூட்டிங் சாதனங்கள் 34% வளர்ச்சியடைந்துள்ளது.

    நிறுவனங்களை பொருத்த வரை அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் சியோமி நிறுவனம் 45.8% பங்குகளை பெற்றிருக்கிறது. இது முந்தைய காலாண்டை விட 31% அதிகம் ஆகும். கோகி 74% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. விற்பனையில் 36% வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

    மூன்றாவது இடம் டைட்டன் பெற்றிருக்கிறது. டைட்டனின் ஃபாஸ்ட்டிராக் ரிஃப்ளெக்ஸ் ஒட்டுமொத்த விற்பனையில் 56% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, ஃபிட்பிட் நிறுவனம் நான்காவது நிறுவனமாக இறுக்கிறது. லெனோவோ மூன்று காலாண்டுகளுக்கு பின் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

    மனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். #WearableTech



    நம் உடலின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை நொடிகளில் கண்டறியும் வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தோளில் அணியக்கூடிய சிறிய பட்டை நம் தோலில் ஒட்டிக் கொண்டதும் வியர்வையை உறிந்து கொண்டு கார்டிசல் அதவாது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை (இயக்குநீர்) நொடிகளில் கண்டறிந்து விடும்.

    நாள் முழுக்க உடலில் கார்டிசல் அளவு இயற்கையாகவே ஏறி, இறங்கும், அந்த வகையில் வழக்கமான காஜ் மனிதர்களின் உடல் சோர்வு மற்றும் மன சோர்வை கண்டறிந்து, அவர்களது அட்ரினல் சுரப்பி சீராக வேலை செய்கிறதா என மருத்துவர்கள் சோதனை செய்ய முடியும்.

    தற்சமயம் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஆய்வகங்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளை தெரிந்து கொள்ள பலநாள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில் பயனர் தனது உடலின் வியர்வையில் பட்டையை வைத்து, இதனை சாதனத்துடன் இணைத்தால் சில நொடிகளில் கொண்டு சில நொடிகளில் மன அழுத்தம் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.



    தற்சமயம் ப்ரோடோடைப் முறையில் சோதனை செய்யப்படும் இந்த வழிமுறை வெற்றிபெறும் பட்சத்தில் மன அழுத்த அளவு சீராக இல்லாத நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆராய்ச்சியாளர்கள் செவ்வக வடிவம் கொண்ட நீட்டத்தக்க சென்சார் மற்றும் மெம்பிரேன் கார்டிசலுடன் இணைந்து கொள்ளும் வகையில் இந்த பட்டையை உருவாக்கியுள்ளனர். தோலில் ஒட்டிக் கொள்ளும் இந்த பட்டையில், வியர்வை படும் போது அதில் உள்ள ஓட்டை வழியே அனுமதிக்கிறது. இதன் வாட்டர்ப்ரூஃப் லேயர் பட்டையை பாழாகாமல் பார்த்துக் கொள்கிறது.

    உடலில் உள்ள வியர்வை பட்டையில் உள்ள நீர்தேக்கம் போன்ற பகுதியில் சேமிக்கப்படும், இதன் மேல் கார்டிசலை உணரும் சவ்வு பொருத்தப்பட்டுள்ளது. #stress #WearableTech
    ×