தொழில்நுட்பம்
கோப்பு படம்: ஐபேட்

மார்ச் 27-இல் புதிய ஐபேட் வெளியிடும் ஆப்பிள்

Published On 2018-03-24 06:20 GMT   |   Update On 2018-03-24 06:20 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் கிரியேட்டிவ் எட்யூகேஷன் நிகழ்வில் புதிய ஐபேட் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனத்தின் கிரியேட்டிவ் எட்யூகேஷன் நிகழ்வு மார்ச் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் மலிவு விலை ஐபேட் மற்றும் கல்வி சார்ந்த மென்பொருள்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

2012-ம் ஆண்டில் இருந்து கல்வி சார்ந்த சாதனங்களை வெளியிட பிரத்யேக விழாவை ஆப்பிள் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இவ்விழாவில் விலை குறைந்த ஐபேட் சாதனம் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் கல்வி சார்ந்து இயங்கும் புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கல்வி சார்ந்த சாதனங்களை பொருத்த வரை கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2017-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் கல்வி சார்ந்த தொழில்நுட்ப சந்தையில் மட்டும் 1770 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது.

ஆப்பிள் சாதனங்கள் 17% ஆக இருந்த நிலையில், கூகுள் க்ரோம்புக் சாதனங்கள் 60% மற்றும் விண்டோஸ் கணினிகள் 22% பெற்றிருந்தன. ஆப்பிள் விழாவில் அந்நிறுவனம் விலை குறைந்த மேக்புக் ஏர் சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபேட்களில் ஆப்பிள் நிறுவனம் கிளாஸ்ரூம் செயலியை வழங்கி வருகிறது. இந்த செயலியை கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆப்பிள் சாதனங்களை ஆசிரியர்கள் கண்கானிக்க முடியும். இத்துடன் ஐடியூன்ஸ் யு செயலியும் வழங்கப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஆசிரியர்கள் ஆன்லைனில் வீட்டுப்பாடம், மதிப்பென் உள்ளிட்டவற்றை வழங்க முடியும்.
Tags:    

Similar News