இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி நார்ஸோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் - விலை எவ்வளவு தெரியுமா?
- இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வந்துள்ளது.
- இது 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி நார்ஸோ 50i பிரைம் எனும் பெயர்கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வந்துள்ளது. மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.7 ஆயிரத்து 800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 8,604 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறம் சிங்கிள் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் லைட் உடன் வருகிறது. அதேபோல் இது 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று உள்ளது. அதேபோல் இடதுபக்கத்தில் சிம் டிரே இருக்கிறது.
டூயல் சிம் சப்போர்ட் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் BLP877 என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. ரியல்மி நார்ஸோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.