தொழில்நுட்பம்
செப்ரானிக்ஸ் செப்-சோல்

செப்ரானிக்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-11-07 11:21 GMT   |   Update On 2019-11-07 11:21 GMT
செப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் செப்-சோல் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



செப்ரானிக்ஸ் நிறுவனம் AAC கோடெக் உதவியுடன் 11 மணிநேர பேட்டரி லைஃப் கொண்ட, செப்-சோல் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த இயர்போன்கள், உங்களது ஆடியோ அனுபவத்தை சிக்கலற்றதாக மாற்றும் விதமாக, ஒரு நெக்பேண்ட் வடிவமைப்பில் காந்த சக்தியுடைய இயர்பீசஸ் கொண்ட இன்-இயர் வகை இயர்போன்களுடன் கிடைக்கிறது. ஸ்டைலான தோற்றத்தில் உயர்ந்த தரத்திலான பிரீமியம் மாட் ஃபினிஷில், இந்த இயர்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்போன் ஆண்டிராய்டு/ ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் இயங்கும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் வருவதால் உங்கள் ஆர்வத்தைத் துரத்தி, கேள்விகள் கேட்டு, உடனடி பதில்களையும் பெற்றிட முடியும். பட்டனை அழுத்துவதன் மூலம், செப்-சோல் வயர்லெஸ் இயர்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்க முடியும்.



சத்த அளவு மற்றும் மீடியா கட்டுப்பாடுகளுக்கான பட்டன்கள் போன்ற இதன் நிறைவான அம்சங்களே, இதனைச்செல்லும் வழியெங்கும் இசையைக் கேட்பவர்களுக்குச் சிறந்த தேர்வாக மாற்றுகிறது. டூயல் பேரிங் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் வசதியுடன் வருவதால், இந்த இயர்போனை இரு சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும். 

இந்த இயர்போன் உட்கட்டமைக்கப்பட்ட மைக்கும் அழைப்பு வந்தால் வைப்ரேஷன் அலர்ட் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது. புதிய செப்-சோல் இயர்போன் கருப்பு, கிரே, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுவம் அனைத்து முன்னணி சில்லறை விற்பனையகங்களிலும் இந்த செப்-சோல் இயர்போன் ரூ. 2499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News