வழிபாடு

காவல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2025-09-12 16:46 IST   |   Update On 2025-09-12 16:46:00 IST
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  • கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

கோவை வெரைட்டிஹால் ரோடு காவல்துறை குடியிருப்பு பகுதியில் ஸ்ரீகாவல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

நேற்றுமுன்தினம் 2-ம், 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால பூஜைகள் நடத்தப்பட்டு கலசங்கள், யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், ஸ்ரீ அய்யனார் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் முருகேசன், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஸ்ரீஅய்யனார் ஆதீனம் அருள் ஆசி வழங்கி பிரசாதம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை அனைத்து காவல் துறை குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News