Recap 2023

2023 ரீவைண்ட்: சட்டசபை தேர்தல் நடந்த மாநிலங்களில் கோலோச்சிய பா.ஜ.க.

Published On 2023-12-23 04:59 GMT   |   Update On 2023-12-23 05:01 GMT
  • 2023ம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
  • இதில் பா.ஜ.க. 3 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளோடு 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தது.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி


கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து என 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சி கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. மேகாலயாவில் பா.ஜ.க, தேசிய மக்கள், ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை அடங்கிய மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. நாகாலாந்தில் என்.டி.பி.பி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்


கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சித்தராமையா முதல் மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் 2,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

5 மாநில தேர்தலில் பா.ஜ.க. அபாரம்


மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்தது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்தது பா.ஜ.க. இதனால் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரமில் எதிர்க்கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

Tags:    

Similar News