Recap 2023

2023 ரீவைண்ட்: சிறைத்தண்டனை பெற்ற முதல் திமுக அமைச்சர்

Published On 2023-12-29 08:45 GMT   |   Update On 2023-12-29 08:45 GMT
  • திமுக ஆட்சி அமைத்து 1967-ல் இருந்து பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தண்டனை பெற்றது இதுவே முதல்முறை
  • 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருந்தார் பொன்முடி. முக்கியமான உயர்க்கல்வித்துறை இலாக்கா பொன்முடிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குகள் போடப்படும். அதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், சில வழக்கு அவர்கள் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்துவிடும்.

அப்படித்தான் பொன்முடிக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைந்துள்ளது.

2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது பொன்முடி அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் பொன்முடியை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீடு தொடர்பான விசாரணை முடிவடைந்து வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. டிசம்பர் 19-ந்தேதி பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, தண்டனை விவரம் 21-ந்தேதி வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி 21-ந்தேதி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால் பொன்முடி தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். அமைச்சர் பதவியையும் இழந்தார்.

தமிழகத்தில் அமைச்சராக இருந்தபோது தண்டனை பெற்று பதவியை இழந்த 3-வது அமைச்சர் பொன்முடி ஆவார். முதன்முறையாக திமுக அமைச்சர் ஒருவர் பதவியை இழந்த நபரும் இவர்தான்.

Tags:    

Similar News