கோப்பு படம்
- நெல்லித்தோப்பில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து மின் மீட்டரை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை நெல்லிதோப்பு-வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் குடியிருப்பவர் செல்வநாயகி (வயது52). இவர் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து மின் மீட்டரை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை நெல்லிதோப்பு-வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் குடியிருப்பவர் செல்வநாயகி (வயது52). இவர் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
செல்வநாயகி வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார். மதியம் உணவு இடைவேளைக்கு செல்வநாயகி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த மின் மீட்டரை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து செல்வநாயகி தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்தார். ஆனால் சி.சி.டி.வி. கேமரா இயங்காமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செல்வநாயகி தனது வீட்டில் வாடகைக்கு விட்டிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு வாலிபர் வீட்டில் அத்துமீறி நுழைந்து மின் மீட்டரை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாக வைத்து செல்வநாயகி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.சி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு மின் மீட்டரை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.