புதுச்சேரி

கஞ்சா விற்ற வாலிபரையும் அவரை கைது செய்த போலீசாரை படத்தில் காணலாம்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-06-14 14:01 IST   |   Update On 2022-06-14 14:01:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
  • புதுவை-கடலூர் மெயின் ரோட்டில் அந்தோணியார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில்

புதுச்சேரி:

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை-கடலூர் மெயின் ரோட்டில் அந்தோணியார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

சோதனையில் அவரது சட்டை பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். மொத்தம் 300 கிராம் கஞ்சா அவர் வைத்திருந்தார். கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சுனில் என்ற கிஷோர்குமார் (வயது22) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிஷோர்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News