புதுச்சேரி

கோப்பு படம்.

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2023-08-13 12:54 IST   |   Update On 2023-08-13 12:54:00 IST
  • கணவர்-மாமனார் மீது புகார்
  • மது குடித்து விட்டு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தனலட்சுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை புது சாரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் புதுவை விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி 28. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமண த்திற்கு பிறகு தனலட்சுமிக்கு அவரது பெற்றோர் 10 பவுன் நகை சீர் செய்தனர்.

திருமணம் செய்த 3 மாதத்திலேயே கார்த்தி கேயன் மது குடித்து விட்டு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தனலட்சுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு கார்த்திகேயனின் தந்தை சுந்தர் கணேஷ். சகோதரி அனிதா அவரது கணவர் அருண்குமார் மற்றும் கார்த்திகேயனின் சகோதரர் ஜெகதீஸ்வரன் ஆகியோரும் உடந்தையாக இருந்து அவர்களும் தனலட்சுமியை கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே த னலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தைக்கு 2 பவுன் சீர் செய்ய வேண்டும் என்று கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தினர். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக தனலட்சுமியின் பெற்றோர் ஒரு பவுன் மட்டுமே குழந்தைக்கு சீர் செய்தனர்.

அப்போது தனலட்சு மியை அவரது பெற்றோர் முன்னிலை யிலேயே கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்ப த்தினர் குழந்தைக்கு கேட்ட படி சீர் செய்ய வில்லை என்று கூறி அடித்து உதை த்து சித்ரவதை செய்தனர்.

மேலும் தனலட்சுமியிடம் இருந்து குழந்தையை பறித்து சென்னையில் வசிக்கும் கார்த்திகேயனின் சகோதரி அனிதா தன் வசம் வைத்துக்கொண்டார். குழந்தையை பார்க்க வேண்டும் என்று தனலட்சுமி பல முறை வர்புறுத்திய போதும் அனுமதிக்க வில்லை. இதையடுத்து தனலட்சுமி தனக்கு இழைக்க ப்பட்ட வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தையை பறித்துக் கொண்டதை குறித்து தனது கணவர்-மாமனார், நாத்தனார்மற்றும் அவரது கணவர், கணவரின் சகோதரர்ஆகிய 5 பேர் மீது வில்லியனூர் அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News