- ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், சத்திரிய சேனா சேவகம், சர்வதேச கேரளா கட்டை விளையாட்டு சம்மேளனம் இணைந்து சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்பட்டது.
- இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி:
ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், சத்திரிய சேனா சேவகம், சர்வதேச கேரளா கட்டை விளையாட்டு சம்மேளனம் இணைந்து சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்பட்டது.
ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கர்லாக்கட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. புதுவை, பல்வேறு வெளிநாடுகள், மாநில, மாவட்டங்களில் இருந்தும் பலர் பங்கேற்றனர். கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் ராஜேந்திரன் இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்.
சத்ரிய சேனா சேவக பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், பொது செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியாளர்கள் பயில்வான் பெரியசாமி, முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் அருள்ராஜ், ராதாகிருஷ்ணன், திருவேங்கடம், பாலாஜி, குமார், சிவராமகிருஷ்ணன், சுவாதி உட்பட நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், நிறுவனர்கள், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.