புதுச்சேரி

விழிப்புணர்வு ஊர்வலத்தை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-10-09 10:33 IST   |   Update On 2022-10-09 10:33:00 IST
  • உலக மனநல தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை சாலையில் நடந்தது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் டூப்ளே சிலையில் முடிவடைந்தது.

புதுச்சேரி:

உலக மனநல தினத்தை முன்னிட்டு கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை சாலையில் நடந்தது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில்சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், மகாத்மா காந்தி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுவாதி, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடற்கரை சாலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் டூப்ளே சிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மனநல மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மூளை மற்றும் மனநல டாக்டர் விமலநாதன் செய்திருந்தார்.

Tags:    

Similar News