புதுச்சேரி

கோப்பு படம்

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-07-10 10:39 IST   |   Update On 2022-07-10 10:39:00 IST
  • வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர்
  • சுதாகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார்

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருமாம்பாக்கம் அருகே வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

மது குடிக்கும் பழக்க முள்ள சுதாகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார். இதனால் சத்யா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

இதற்கிடையே அதிக குடி பழக்கத்தினால் சுதாகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உடல் மெலிந்து போனதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அடிக்கடி குடும்பத்தி னரிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் சத்யா வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளும் விளையாட சென்றிருந்த நேரத்தில் மனமுடைந்த சுதாகர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தவளக்குப்பம் நல்லவாடு ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது57). கூலி தொழிலாளி. இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். செல்வராஜ் அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கமுடையவர்.

அதுபோல் காசான்திட்டு சாராயக்கடைக்கு செல்வராஜ் சாராயம் குடிக்க சென்றார். அப்போது அளவுக்கு அதிமாக சாராயம் குடித்ததால் செல்வராஜ் சாராயக்கடை அருகிலேயே இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் உத்திரபாலன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News