புதுச்சேரி

மதுபாட்டில்கள் கடத்திய பெண்ணையும் அவரை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது

Published On 2022-07-04 09:13 GMT   |   Update On 2022-07-04 09:13 GMT
  • புதுவையில் இருந்து மதுராந்தகத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
  • புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக உருளை யன் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புதுச்சேரி:

புதுவையில் இருந்து மதுராந்தகத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக உருளை யன் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உருளையன் பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

அப்போது ஒரு பெண் சாக்கு மூட்டையுடன் நின்று கெரண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனை ெதாடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப் பெண் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த போது அதில் 200 மது பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பெண் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சத்யா (40), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News