புதுச்சேரி

பாகூர் தொகுதியில் சாலை அமைக்கும் பணியை செந்தில் குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

நலத்திட்ட பணிகள்-செந்தில் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-08-18 04:26 GMT   |   Update On 2022-08-18 04:26 GMT
  • புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலமாகபாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு ராயல் நகரில் ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
  • மூர்த்திக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் விடுபட்ட பணிகளை ரூ.5 லட்சம் செலவில் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடந்தது.

புதுச்சேரி:

புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலமாகபாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு ராயல் நகரில் ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைத்தல், மூர்த்திக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் விடுபட்ட பணிகளை ரூ.5 லட்சம் செலவில் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News