புதுச்சேரி

மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்ட காட்சி.

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பேச்சு போட்டி

Published On 2022-08-10 09:36 GMT   |   Update On 2022-08-10 09:36 GMT
  • வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி ஓய்ஸ்மேன் பள்ளியில் நடை பெற்றது.
  • நிகழ்ச்சிக்கு சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் தமிழ்நாடு வ.உ.சி. இலக்கிய வானம் சார்பில் 75-வது சுதந்திர தினம் மற்றும் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி ஓய்ஸ்மேன் பள்ளியில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். பொருப்பாளர்கள் வீரசேகரன், கவுசல்யாதேவி, சரஸ்வதி வைத்தியநாதன், கலியபெருமாள், காமராசு, ராஜாராம், இடைக்கலிநாடு செல்வமணி, பழனி பாஸ்கரன், இளமுருகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்ஸ் மேன் பள்ளி தாளாளர் சரோஜாபாபு கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News