புதுச்சேரி
விஸ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
விஸ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
- புதுவை விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலும் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரிலும் 2 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்ததை கண்டித்து புதுவை விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வட தமிழ்நாடு மாநில சமுதாய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் புதுவை செயலாளர் ரவிவர்மன், இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன் உள்பட பல கலந்துக் கொண்டனர்.