புதுச்சேரி
வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கொசு ஒழிப்புத்துறை சார்பில் வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
- தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான், மோரீஸ் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி குட்பட்ட வாணரப்பேட்டை, தாவீது பேட், எல்லையம்மன் தோப்பு, காளியம்மன் தோப்பு மற்றும் டாக்டர் தோட்டம் ஆகிய பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புத்துறை சார்பில் வாகனம் மூலம் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.
இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச்செயலா ளர்கள் சந்துரு, மணி, காலப்பன், லாரன்ஸ் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் ரகுமான், மோரீஸ் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.