புதுச்சேரி

கோப்பு படம்.

நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்

Published On 2022-08-24 09:07 GMT   |   Update On 2022-08-24 09:07 GMT
  • நெட்டப்பாக்கம் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
  • இந்த நிலையில் மதியம் முத்து கிருஷ்ணன் தனது நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

நெட்டப்பாக்கம் அருகே முளப்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது62). விவசாயி. இவரது நிலத்துக்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த பழனிராஜா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இந்த நிலையில் மதியம் முத்து கிருஷ்ணன் தனது நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார். அப்போது டிராக்டர் பழனிராஜா நிலத்தின் வழியே சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பழனிராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இருவருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து இவரும் தனித்தனியே நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News