புதுச்சேரி

சுனாமி குடியிருப்பு வீதியில் வழிந்தோடிய கழிவுநீர் காட்சி படம்.

சுனாமி குடியிருப்பு கழிவுநீர்-தி.மு.க. சேவை மையம் சீரமைப்பு

Published On 2022-08-03 09:35 GMT   |   Update On 2022-08-03 09:35 GMT
  • முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பில் பாதாள சாக்கடை கசிந்து கழிவுநீர் வீதிகளில் 5 நாட்களாக ஓடியது.
  • பொதுப்பணிதுறை ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பில் பாதாள சாக்கடை கசிந்து கழிவுநீர் வீதிகளில் 5 நாட்களாக ஓடியது.

இதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபுவிடம் கோரிக்கை வைத்தனர்

இதனையடுத்து பொதுப்பணிதுறை பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனத்தை வைத்து மதன்பாபு சீரமைத்தார். பொதுப்பணிதுறை ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News