புதுச்சேரி

பயிற்சியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து உதவித் தொகை வழங்கினார்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி

Published On 2022-08-18 09:17 GMT   |   Update On 2022-08-18 09:17 GMT
  • புதுவை தொழிலாளர் துறை வாயிலாக, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • புதுவை மூலகுளம் கேரியர் அகடாமி பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித் தொகையுடனான இலவச பயிற்சியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை தொழிலாளர் துறை வாயிலாக, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதுவை மூலகுளம் கேரியர் அகடாமி பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித் தொகையுடனான இலவச பயிற்சியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார். விழாவில், சிவசங்கரன் எம்.எல்.ஏ., மத்திய அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக் கழக துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி, புதுவை குளோபல் கேரியர் அகாடமி நிறுவனர் வெங்கடேசன், மற்றும் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News