புதுச்சேரி

திருவள்ளுவர் சிலைக்கு, தமிழ்ச்சங்கத்தினர் மரியாதை செலுத்திய காட்சி.

திருவள்ளுவர் சிலைக்கு, தமிழ்ச்சங்கத்தினர் மரியாதை

Published On 2023-09-02 05:37 GMT   |   Update On 2023-09-02 05:37 GMT
  • தமிழர்களின் வரலாறு, திருக்குறளின் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
  • முடிவில் பொருளாளர் சத் தியநாதன் நன்றி கூறினார்.

புதுச்சேரி:

மொரிசீயஸ் நாட்டில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முகப்பில், 2,470 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் சிலையை புதுவை தமிழ்ச்சங்கத் தலை வர் வி.முத்து நிறுவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலந்துரை யாடல் நடந்தது.

பல்கலைக் கழக துணைவேந்தர் ராம்பிரதாப், தமிழ்த்துறை தலைவர் ஜீவேந்திர சீமான், இந்திய மொழிகளின் இயக்குநர் அப்பாடு, இயக்குனர் குன்சால் மேனாள், தமிழ்த்துறை தலைவர் கதிர்வேல் சொர் ணம், 200 தமிழ் கோவில்களின் கூட்டமைப்பு தலைவர் குமரன் செங்கான் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தமிழ் மொழி, மொரிசீயத் தில் தமிழர் வரலாறு

தொடர்பான பல கருத்துக்களை வழங்கி உரையாற்றினார்கள். முடிவில் வி.முத்து பண்டைத் தமிழர்களின் வரலாறு, திருக்குறளின்

நெறிமுறைகள் என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.

மொரிசீயஸ் நாட்டின் மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் பாலன் வையாபுரி பிள்ளை தமிழ்க்கழகம் மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குருநாத வைத்திலிங்கம், செயலாளர் லேசினி முனிசாமி, துணைத்தலைவர்கள் பொண்ணுசாமி, கமலநாதன் , வைத்திலிங்கம், பொண்ணையன், ஸ்ரீவீரராகு, ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். முடிவில் பொருளாளர் சத் தியநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News