புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

Published On 2022-12-30 04:52 GMT   |   Update On 2022-12-30 04:52 GMT
  • பாகூர் அருகே சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார். பாகூர் அருகே குருவி நத்தம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பழனி. சமையல் தொழிலாளி இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
  • பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி பரிந்துரை செய்ததின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் பழனியை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

புதுச்சேரி:

பாகூர் அருகே சமையல் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

பாகூர் அருகே குருவி நத்தம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பழனி. (வயது 44). சமையல் தொழிலாளி இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த ஒருவருடமாக பழனிக்கு ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் பழனி வீட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு வங்கிக்கு செல்ல தயாரானார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி சுப்புலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி பரிந்துரை செய்ததின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் பழனியை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பழனி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News