புதுச்சேரி

கோப்பு படம்

எலி மருந்து தின்று தொழிலாளி தற்கொலை

Published On 2022-08-05 14:47 IST   |   Update On 2022-08-05 14:47:00 IST
  • கோரிமேடு அருகே சரியாக வேலை கிடைக்காத விரக்தியில் தச்சுத் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
  • புதுவை கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல்

புதுச்சேரி:

கோரிமேடு அருகே சரியாக வேலை கிடைக்காத விரக்தியில் தச்சுத் தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 41) தச்சுத் தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஞானவேலுக்கு சரியான தச்சுத் தொழில் கிடைக்க வில்லை. இதனால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தார்.

இது பற்றி தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.அவருக்கு மனைவி மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் ஞானவேல் வேலை கிடைக்காத விரக்தியில் மனமுடைந்து இருந்து வந்தார்.

இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஞானவேல் சம்பவத்தன்று எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞானவேல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அவரது சகோதரர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News