புதுச்சேரி

கோப்பு படம்.

மூச்சு திணறி மூதாட்டி பரிதாப சாவு

Published On 2023-02-12 04:32 GMT   |   Update On 2023-02-12 04:32 GMT
  • மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருடன் அவரது பாட்டி கமலா வசித்து வந்தார்.
  • இந்த நிலையில் கமலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருடன் அவரது பாட்டி கமலா வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக கமலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஒரு வாரமாக அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கமலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் கமலா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News