புதுச்சேரி

கோப்பு படம்.

முதியவர் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-09-04 10:09 IST   |   Update On 2022-09-04 10:09:00 IST
  • திருக்கனூர் அருகே முதியவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
  • திருமணம் செய்து கொள்ளாத இவர் தனது அண்ணன் மகன் சிவசந்திரன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே முதியவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்காளன் (வயது68). திருமணம் செய்து கொள்ளாத இவர் தனது அண்ணன் மகன் சிவசந்திரன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அங்காளன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் மகன் சிவசந்திரன் அங்குள்ள சாராயக்கடை அருகே சென்று தேடி பார்த்தார். அப்போது அங்கு அங்காளன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்ற போது அங்காளன் இறந்து போனார்.

அங்களானுக்கு அடிக்கடி வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் வலிப்பு நோய் ஏற்பட்டு அங்காளன் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது அண்ணன் மகன் சிவசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News