- உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
- பள்ளியில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பேசினார்.
புதுச்சேரி, செப்.5-
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. நேரு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பள்ளியில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பேசினார். '
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை வேலம்மாள், ஆசிரியர்கள் மாணிக்கவாசகம், ஜோஸ்வின்நிர்மலா, முத்துசெல்வம், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் குப்புசாமி, ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் ராமலிங்கம், சிவராஜ், வேலாயுதம், கைலாஷ், சாமிநாதன், பழனி, தமிழ், ராஜா, தமிழ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.