புதுச்சேரி

கோர்ட்டு வளாகத்தில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது

Published On 2023-02-16 04:00 IST   |   Update On 2023-02-16 04:00:00 IST
  • வழக்கு விசாரணைக்காக புதுவை கோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ் அழைத்து வரப்பட்டார்.
  • தேவநாதனை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூரில் கொலை வழக்கு தொடர்பாக பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைக்காக புதுவை கோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு மர்மபொருளை ஒரு வாலிபர் கொடுத்தார். இதைபார்த்த போலீசார் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், பொறையூரை சேர்ந்த தேவநாதன் (வயது19) என்பதும், விசாரணை கைதி பிரகாசுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. அதையடுத்து தேவநாதனை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News