புதுச்சேரி
null

நிலுவை சம்பளம் வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Published On 2023-03-20 07:05 GMT   |   Update On 2023-03-20 09:29 GMT
  • பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • தலைமைச் செயலகம் எதிரில் கடலில் முழங்கால் அளவு இறங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் 8-வது நாளாக இன்று தலைமைச் செயலகம் எதிரில் கடலில் முழங்கால் அளவு இறங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி. கொடிகளுடன் அவர்கள் கடலில் இறங்கினர்.

போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர், ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு, ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிஷேகம் முன்னிலை வகித்தனர். பாப்ஸ்கோ சங்க நிர்வாகிகள் நடராஜன், முனுசாமி, அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை, முருகவேல், வேலு, பாலமுருகன், ஜீவரத்தினம், ராஜூ, விசுவநாதன், குமரகுரு, அமுதா, அம் சவல்லி, நக்கீரன், சத்தியசீலன், ஊழியர்கள் கோவர்தன், குணா, கெஜவரதன், நாராயணன், பாலச்சந்தர், பார்த்திபன், செந்தில், சௌந்தர்ராஜன், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப்அடைக்கலராஜ், பாலாசுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் புதுவை கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News