புதுச்சேரி

புதுவை காமாட்சியம்மன் கோவில் ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு- தலைமறைவான மேலும் ஒரு அதிகாரி சரண்

Published On 2023-09-03 04:12 GMT   |   Update On 2023-09-03 04:12 GMT
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட் டது.

இது தொடர்பாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), அப்போதைய செட்டில் மெண்ட் அதிகாரியாக இருந்த மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 30-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜியை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த ரமேசை தேடி வந்தனர். இதற்கிடையே ரமேஷ் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News