- தி .எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளியின் இரசன ரங்கம் 9-ம் ஆண்டு விழா வைப்ரேஷன் தி ஹீலர்ஸ் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஜிப்மர் அரங்கத்தில் நடைபெற்றது.
- பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
கடலூர் பெரிய காட்டுப்பாளையம். தி .எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளியின் இரசன ரங்கம் 9-ம் ஆண்டு விழா வைப்ரேஷன் தி ஹீலர்ஸ் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஜிப்மர் அரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். புதுவை ஸ்ரீபாலாஜி வித்யா பீத் இயக்குனர் மற்றும் பேராசிரியர் ஆனந்த பாலயோகி பாவானணி, புதுவை பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியரும் மிருதங்கம் மற்றும் அறுமுகனம் வித்துவானுமான கோப குமார், கிருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளி பவாணி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமான வகையில் அமைந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பாராட்டி பேசினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை பள்ளி தலைமை ஆசிரியர் கமலா முரளி முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.