ஒருங்கிணைந்த தற்காப்பு கலை சங்க பயிற்சியாளர்கள் கூட்டம் நடந்த காட்சி.
- தற்காப்பு கலை சங்க பயிற்சியாளர்கள் கூட்டம் நடந்தது.
- பயிற்சி முகாம் மற்றும் போட்டிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஒருங்கிணைந்த தற்காப்பு கலை சங்க பயிற்சியாளர்கள் கூட்டம் மாநில சங்க தலைமை அலுவலகத்தில் சேர்மன் கராத்தே வளவன் தலைமையில் நடந்தது. தலைவர் ராஜ், தொழில்நுட்ப இயக்குனர் சந்தோஷ், செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், வெங்கடாஜலபதி, மகேஷ், பாகூர் பாலா, காலாப்பட்டு செல்வம், சுரேஷ், அண்ணாநகர் செல்வம், செந்தில், ஜிப்மர் சுப்பிரமணி, திலாஸ்பேட்டை அசோக், கோபி, அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 17,18,19, ஆகிய தேதிகளில் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தற்காப்பு கலையை ஒருங்கிணைப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முடிவில் பொருளாளர் சுபாஷ் நன்றி கூறினார்.