புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு

Published On 2023-11-04 06:28 GMT   |   Update On 2023-11-04 06:28 GMT
  • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
  • ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும்.

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

தமிழகத்தில் வயது தளர்வு அளித்துள்ளதை போல ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் தற்போது அறிவித்துள்ள வயது வரம்பில் மேலும் 3 வயதை உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும். பாகுபாடு நிறைந்த சமூக ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலுக்கு உள்ளாகி உள்ள பெண்கள் அதிகாரம் பெறவும், முன்னேறவும் அரசு வேலை வாய்ப்பில் சிறப்பு சலுகையை உறுதி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு சிறப்பு கூறு நிதியத்தை முறைப்படுத்தி செயல்படுத்திட விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். அது குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கூட்டத்தை நடத்த அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News